Thursday, 5 April 2012

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 2)



கண்களா அவைகாந்தங்களா
கட்டியிழுக்கும் வித்தையை
கற்றதெங்கே இனியவளே!!!
 
மீரா தான் முதலில் சுதாரித்து "sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய  மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

"I... I...நா... நான்... வந்து..." என மீரா தடுமாறினாள்

இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழலில் எப்போதும் சிக்கியிராத நடுக்கம் அவள் குரலில் தெரிய "You...You...நீ...நீ...ம்... Speak out.. come on" என்றான் அவன் விடாமல், அப்போதும் அவளின் விழிகளை ரசித்தவனாய்

ஆனால் அவன் முகத்தில் இருந்து எதையும் படிக்க இயலாமல் தோற்றாள் மீரா

"Yes...?" என்றான் மீண்டும் அவள் விளக்கத்திற்கு காத்திருப்பவன் போல்

"அது...வந்து... என் பிரெண்ட் நீங்க இட்டாலியன்னு சொன்னதால...."

"சொன்னா... என்ன வேணா பேசலாமா?" என குற்றம் சாட்டுவது போல் கேட்க மீரா பேச இயலாமல் மௌனமானாள்

அவளது இயலாமை கோபமாய் சதீஸின் மேல் தாவியது. அவனை திரும்பி முறைத்தாள்

இன்று இவளிடம் என்ன மண்டகப்படி விழ போகிறதோ என பயந்தபடி நின்றிருந்தான் சதீஷ்

"ஹலோ... நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். உன் பிரெண்ட்கிட்ட சண்டை போடறது அப்புறம் இருக்கட்டும்... இன்னும் நான் கேட்டதுக்கு ஆன்சர் வரலியே" என்றான் அவன் விடாமல்

"ஐம் சாரி..." என்றாள் மீரா அதற்கு மேல் என்ன செய்வதென புரியாமல்

"சாரி கேட்டா... சொன்னதெல்லாம் இல்லேன்னு ஆய்டுமா? எப்படி எப்படி... அவனும் அவன் மூஞ்சியுமா? ம்...?" என விடமாட்டேன் என்பது போல் அவன் குரல் உயர்த்தி பேச

தன் மீது தவறென்பதால் பதில் பேச இயலாமல் தலை குனிந்தாள் மீரா, தலையை உயர்த்தி பார்த்திருந்தால் அவன் கண்களில் தெரிந்த கேலியை உணர்ந்திருப்பாள்

அவள் அமைதி அவனை மேலும் சீண்டி பார்க்க தூண்ட "ஹலோ... உன் பேர்...? மீரா ரைட்? உன் பிரெண்ட் அப்படி தான் கூப்ட மாதிரி இருந்தது... மீரா... பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு... பேச்சு தான் சரி இல்ல... என்ன பனிஷ்மன்ட் குடுக்கலாம் உனக்கு?" என அவன் யோசிப்பது போல் நெற்றியில் கை வைத்து கேட்க

தலை உயர்த்தியவளின் விழிகளில் நீர்  படலம் தெரிய,  அவனது பொய் கோபம் விலக "ஹேய்... மீரா..." என்றான் நிஜமான கரிசனையோடு

"நான் வேணும்னு சொல்லல... சும்மா விளையாட்டா... உங்களுக்கு பாஷை புரியாதுன்னு.... சாரி... " எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என பயம் காட்டிய கண்ணீருடன் அவள் கூற

"வாட் இஸ் திஸ் மீரா? நீ உன் பிரெண்ட்கிட்ட பேசினத பாத்து என்னமோ ரெம்ப கூல்னு நெனச்சு கொஞ்சம் வம்பு பண்ணலாம்னு பேசினா... இதுக்கு போய்..." என்றவன் டேபிள் மீது இருந்து டிஷ்யு பெட்டியை எடுத்து நீட்ட அப்போது தான், தான் அழுவதை உணர்ந்தவள் போல் அவசரமாய் கண்களை துடைத்தாள் மீரா

"Are we okay?" என அவன் கேட்க

"ம்..." என்றாள் மீரா இன்னும் மாறாத முகத்துடன்

அதே நேரம் "Hei... who is your new friends?" என்றபடி வந்தாள் ஒரு பெண்

"This is Meera...he is...." என அவன் விழிக்க

"ஒகே ஒகே... உனக்கு பொண்ணுங்க பேரு மட்டும் தான் மெமரில இருக்கும்னு எனக்கு தெரியும்" என அவள் கேலி செய்தாள்

"அட....நீங்களும் என் கட்சியா?" என சதீஷ் அவனிடம் கை குலுக்க சிரிப்பு அடங்க சற்று நேரம் ஆனது

மீரா இன்னும் சற்று சகஜமாக இயலாமல் இருந்தாள். அதை சரி செய்ய எண்ணியோ என்னவோ

"ஒகே... இவ்ளோ நடந்தப்புறம் நமக்குள்ள நீங்க வாங்க எல்லாம் எதுக்கு... " என்று அவன் கூற

"அதுக்கு மொதல்ல உங்க பேரு எங்களுக்கு தெரியணுமே" என்றான் சதீஷ் அப்பாவியாய், மீண்டும் ஒரு சிரிப்பு வெடித்தது அவ்விடம்

"ஒகே... I'm Stevenson, call me steve" என்றவன் மீராவின் முகத்தை காண, ஸ்டீவ் எதிர்பார்த்தது போலவே அவள் முகத்தில் ஒரு ஆச்சர்ய அலை தெரிந்தது

"And... she is my best friend Madhu" என தன் தோழியை அறிமுகம் செய்தான்

"Interesting... by the way... I'm Satish" என கை நீட்டினான் மதுவிடம் விளையாட்டாய்

"ஹலோ மிஸ்டர் சதீஷ்.... உங்க விளையாட்டெல்லாம் இந்த ஊரு அம்மணிககிட்ட வெச்சுகோங்க சார்... இந்த மது ரெம்ப பாத்தாச்சு" என அவளும் கேலி செய்ய சிரிப்பு சத்தம் ஓய சற்று நேரமானது

"அது சரி... என்னமோ நமக்குள்ள இவ்ளோ நடந்தப்புறம்னு பில்ட் அப் பண்ணின, என்ன ஸ்டீவ்?"

"அது வந்து மது..." என சதீஷ் ஏதோ கூற முயல

"நீ சொன்ன வரைக்கும் போதும்... பேசாம இரு" என்றாள் மீரா நிஜமான கோபத்துடன்

"வாவ்... அழகான பொண்ணுக கோபபட்டா கூட அழகு தான்னு இப்போ ஒத்துக்கறேன்" என ஸ்டீவ் கூற மீரா கோபம் மறந்து சிரித்தாள்

"ஆஹா... என்ன ஸ்டீவ் இது? இப்படி பப்ளிக்கா அப்ளிகேசன் போடறது not so cool..."

"Don't worry Madhu... உனக்கு வேணும்னாலும் அப்ளிகேசன் போட  ஆள்  ரெடி  பண்றேன்..." என ஸ்டீவ் கேலி செய்ய

"ஆள விடு சாமி" என அவள் நகர

"ஹேய் ஹேய்... வெயிட்... என்ன நடந்ததுன்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?" என நடந்தவற்றை ஸ்டீவ் கூற மது சத்தமாய் சிரித்தாள்

"எல்லாம் இந்த கொரங்கால வந்தது" என்றாள் மீரா சதீஷை முறைத்தவாரே

"சதீஷ் சொன்னதுல தப்பெதுவும் இல்ல மீரா... I'm an Italian..he was right" என ஸ்டீவ் கூற

"What?" என அதிர்ந்தனர் மீரா சதீஷ் இருவரும்

"ஏன்...? உங்க தமிழ் சினிமால எல்லாம் வர்ற மாதிரி இட்டாலியன் கூட பிரெண்ட் ஆகரதில்லைன்னு எதாச்சும் ப்ராமிஸ் இருக்கா?" என ஸ்டீவ் கேலி போல் கேட்க

"அதில்ல... பட்... நீங்க... தமிழ் எப்படி..இவ்ளோ fluentஆ ..."

"அதை நான் சொல்றேன் மீரா... ஸ்டீவ் என்ற ஸ்டீவென்சன் அவதரித்தது Italyல தான். ஸ்டீவோட அப்பா ஒரு Father .. "

"மது, எங்க அப்பா கூட பாதர் தான் மதர் இல்ல" என சதீஷ் டைமிங் காமெடி உதிர்க்க, மீரா அவனை முறைப்பதை பொருட்படுத்தாமல்

"ஹா ஹா ஹா... I like you man" என ஸ்டீவ் சதீஷ் தோளில் நட்பாய் கை போட

"ஐயோ... நான் அப்படிபட்டவன் இல்ல ஸ்டீவ்" என சதீஷ் விலகி நிற்க, அதற்கு மேல் அடக்கமாட்டாமல் மூவரும் சிரித்தனர்

"எங்க மீரா புடிச்ச இப்படி ஒரு பிரெண்ட்?"

"இது நான் தேடி புடிச்சதில்ல மது... தானா வந்து ஒட்டிகிட்டது"

"என்ன என்னை அது இதுங்கற... நான் என்ன ஆடா மாடா" என சதீஷ் குரல் உயர்த்தினான்

"ரெண்டும் தான்... உன் ஹிஸ்டரி மொத்தமும் எனக்கு தெரியும் ஞாபகம் வெச்சுக்கோ" என இயல்பாய் மீரா அவனிடம் எப்போதும் போல் வம்பாய் பேச, தன்னையும் அறியாமல் ஸ்டீவின் கண்கள் இருவரையும் அளவெடுப்பது போல் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை

"நம்ம ஹிஸ்டரி அப்புறம் பேசலாம்... மொதல்ல இந்த இட்டாலிகாரன் ஹிஸ்டரி என்னனு சொல்லு மது... எனக்கு மண்டையே வெடிச்சுடும் இல்லேனா" என்றான் சதீஷ் பொறுமை இழந்தவனாய்

"நீ எங்க சொல்ல விடற சதீஷ்" என மது கேலி செய்ய

"ஒகே ஒகே... me silent ...சொல்லு சொல்லு" என சதீஷ் நல்ல பிள்ளை போல் அமைதியாய் நின்றான்

"ஸ்டீவுக்கு அஞ்சு வயசு இருக்கறப்ப அவங்க அப்பாவுக்கு Missionary மூலமா சென்னைல ஒரு கேத்தலிக் சர்ச்ல Father போஸ்டிங் கெடைச்சு இந்தியா போக வேண்டி வந்தது. அப்புறம் பத்து வருஷம் சென்னைவாசி தான் இவன். அப்போ தான் ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் கூட பேசி தமிழ் நல்லா கத்துகிட்டான. ஒரிஜினல் தமிழ் பொண்ணான என்னை விட நல்லாவே சுத்த தமிழ் பேசுவான். நானும் இவனும் இப்ப அஞ்சு வருசமா பிரெண்ட்ஸ் 11th gradeல இருந்து...  எங்க பாமிலியும் அப்போ தான் இங்க Canada immigrate ஆகி வந்தோம்"

"வாவ்... நம்பவே முடியல" என்றாள் மீரா இன்னும் ஆச்சிர்யம் விலகாமல்

"உண்மைய சொல்லணும்னா... எனக்கு தமிழ் லேங்குவேஜ் பிடிச்சு தான் கத்துகிட்டேன். வீட்டுக்கு தெரியாம தமிழ் எழுத க்ளாஸ் எல்லாம் கூட போய் இருக்கேன் சென்னைல இருந்தப்ப. இங்க வந்தப்புறமும் நெறைய தமிழ் புக்ஸ் தேடி தேடி படிப்பேன் just out of interest, ofcourse வீட்டுக்கு தெரியாமதான்"

"ஏன் உங்க வீட்டுல திட்டுவாங்களா?"

"ஆமா மீரா. எங்கப்பா strict Catholic Father. வீட்டுல மிலிட்டரி ரூல் தான். சென்னைல கேத்தலிக் ஸ்கூல்ல தான் சேத்து இருந்தாங்க என்னை. அப்பாவோட siblings (உடன் பிறப்புகள்) எல்லாம் கனடால இருந்ததால எப்படியும் இங்க வந்துடனும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தாரு. அதனால நான் பிரெஞ்சு கத்துக்கணும்னு ரெம்ப force பண்ணுவாரு"

"நீங்க தமிழ் பேசறது வீட்டுல தெரியுமா?"

"ம்... அம்மாவுக்கு தெரியும் மீரா. அப்பாவுக்கு தெரிஞ்சா நான் காலி" என ஸ்டீவ் சிரிக்க

"இங்க வந்து accustom ஆகறது கஷ்டமா இருக்கலையா உங்களுக்கு?"

"ஹேய்... மீரா... கால் மீ ஸ்டீவ்... வாங்க போங்க எல்லாம் வேண்டாம்"

"அது...சட்டுன்னு வர்ல...." என மீரா தயங்க

"இந்த மரியாதை தான் எனக்கு தமிழ்ல மொதல்ல கவர்ந்த விஷயம். இங்கிலீஷ்ல just you me தான் இருக்கு... "

"அம்மா தாயே... உன் பேட்டி எல்லாம் முடிஞ்சதா... எனக்கு பசி உயிர் போகுது" என சதீஷ் மயக்கம் வரும் போல் பாவனை செய்ய

"செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் சதீஷ்" என ஸ்டீவ் கூற, ஆச்சரியத்தில் சதீஷ் விழிக்க "திருக்குறள் கூட கொஞ்சம் தெரியும், தமிழ் க்ளாஸ்ல கத்துக்கிட்டது" என குறும்பாய் கண்ணடித்து சிரித்தான் ஸ்டீவ்

தன்னையும் அறியாமல் ஒரு கணம் மீராவின் பார்வை அவன் முகத்தில் பதிந்தது, அவன் சிரிப்பை ரசித்தது. அதே நேரம் அவனும் அவளை பார்க்க சட்டென பார்வையை விலக்கினாள் மீரா

இதை கவனிக்காத சதீஷ் "நான் அம்பேல்... மீரா இவன் மட்டும் நம்ம ஊரு டிவிகாரங்க கண்ணுலபட்டான் அவ்ளோ தான்... சாலமன் பாப்பையாவை தூக்கிட்டு இவனை காலைல ப்ரோக்ராம்ல போட்டு காசு பண்ணிடுவாங்க. கொஞ்சம் ஏமாந்தா வெள்ளை வள்ளுவர்னு இவனுக்கு மெரீனா பீச்ல சிலை வெச்சாலும் வெப்பாங்க... எப்படியோ ஒளிஞ்சு போங்க... நான் போய் ரொட்டிய அசை போடறேன்..."

"நீ அதுனு சொன்னது கரெக்ட் தான் மீரா" என நேரம் பார்த்து மது கேலி செய்ய, சதிஷின் முறைப்பை கண்டுகொள்ளாமல் மீரா சிரிக்க, அதை ஒரு ஜோடி கண்கள் ரகசியமாய் ரசித்தது

இனி...

No comments:

Post a Comment