Friday, 6 April 2012

Things for the Peace of Mind


In this mechanical world, it's hard to have a peace of mind. But unless you are going to have a peace of mind in your live, whatever you achieve in your life is a waste. So, here are some of the 10 things that one must stick-to to have a peace of mind in one's life... ( All the pictures given below are just for illustration purpose only. )



1. Do Not Interfere In Others Business Unless Asked

2. Forgive And Forget

3. Do Not Crave For Recognition

4. Do Not Be Jealous

5. Change Yourself According To The Environment
6. Endure What Cannot Be Cured

7. Do Not Bite Off More Than You Can Chew

8. Meditate Regularly


9. Never Leave The Mind Vacant

10. Do Not Procrastinate And Never Regret

Thursday, 5 April 2012

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 2)



கண்களா அவைகாந்தங்களா
கட்டியிழுக்கும் வித்தையை
கற்றதெங்கே இனியவளே!!!
 
மீரா தான் முதலில் சுதாரித்து "sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய  மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

"I... I...நா... நான்... வந்து..." என மீரா தடுமாறினாள்

இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழலில் எப்போதும் சிக்கியிராத நடுக்கம் அவள் குரலில் தெரிய "You...You...நீ...நீ...ம்... Speak out.. come on" என்றான் அவன் விடாமல், அப்போதும் அவளின் விழிகளை ரசித்தவனாய்

ஆனால் அவன் முகத்தில் இருந்து எதையும் படிக்க இயலாமல் தோற்றாள் மீரா

"Yes...?" என்றான் மீண்டும் அவள் விளக்கத்திற்கு காத்திருப்பவன் போல்

"அது...வந்து... என் பிரெண்ட் நீங்க இட்டாலியன்னு சொன்னதால...."

"சொன்னா... என்ன வேணா பேசலாமா?" என குற்றம் சாட்டுவது போல் கேட்க மீரா பேச இயலாமல் மௌனமானாள்

அவளது இயலாமை கோபமாய் சதீஸின் மேல் தாவியது. அவனை திரும்பி முறைத்தாள்

இன்று இவளிடம் என்ன மண்டகப்படி விழ போகிறதோ என பயந்தபடி நின்றிருந்தான் சதீஷ்

"ஹலோ... நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். உன் பிரெண்ட்கிட்ட சண்டை போடறது அப்புறம் இருக்கட்டும்... இன்னும் நான் கேட்டதுக்கு ஆன்சர் வரலியே" என்றான் அவன் விடாமல்

"ஐம் சாரி..." என்றாள் மீரா அதற்கு மேல் என்ன செய்வதென புரியாமல்

"சாரி கேட்டா... சொன்னதெல்லாம் இல்லேன்னு ஆய்டுமா? எப்படி எப்படி... அவனும் அவன் மூஞ்சியுமா? ம்...?" என விடமாட்டேன் என்பது போல் அவன் குரல் உயர்த்தி பேச

தன் மீது தவறென்பதால் பதில் பேச இயலாமல் தலை குனிந்தாள் மீரா, தலையை உயர்த்தி பார்த்திருந்தால் அவன் கண்களில் தெரிந்த கேலியை உணர்ந்திருப்பாள்

அவள் அமைதி அவனை மேலும் சீண்டி பார்க்க தூண்ட "ஹலோ... உன் பேர்...? மீரா ரைட்? உன் பிரெண்ட் அப்படி தான் கூப்ட மாதிரி இருந்தது... மீரா... பேரெல்லாம் நல்லாத்தான் இருக்கு... பேச்சு தான் சரி இல்ல... என்ன பனிஷ்மன்ட் குடுக்கலாம் உனக்கு?" என அவன் யோசிப்பது போல் நெற்றியில் கை வைத்து கேட்க

தலை உயர்த்தியவளின் விழிகளில் நீர்  படலம் தெரிய,  அவனது பொய் கோபம் விலக "ஹேய்... மீரா..." என்றான் நிஜமான கரிசனையோடு

"நான் வேணும்னு சொல்லல... சும்மா விளையாட்டா... உங்களுக்கு பாஷை புரியாதுன்னு.... சாரி... " எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என பயம் காட்டிய கண்ணீருடன் அவள் கூற

"வாட் இஸ் திஸ் மீரா? நீ உன் பிரெண்ட்கிட்ட பேசினத பாத்து என்னமோ ரெம்ப கூல்னு நெனச்சு கொஞ்சம் வம்பு பண்ணலாம்னு பேசினா... இதுக்கு போய்..." என்றவன் டேபிள் மீது இருந்து டிஷ்யு பெட்டியை எடுத்து நீட்ட அப்போது தான், தான் அழுவதை உணர்ந்தவள் போல் அவசரமாய் கண்களை துடைத்தாள் மீரா

"Are we okay?" என அவன் கேட்க

"ம்..." என்றாள் மீரா இன்னும் மாறாத முகத்துடன்

அதே நேரம் "Hei... who is your new friends?" என்றபடி வந்தாள் ஒரு பெண்

"This is Meera...he is...." என அவன் விழிக்க

"ஒகே ஒகே... உனக்கு பொண்ணுங்க பேரு மட்டும் தான் மெமரில இருக்கும்னு எனக்கு தெரியும்" என அவள் கேலி செய்தாள்

"அட....நீங்களும் என் கட்சியா?" என சதீஷ் அவனிடம் கை குலுக்க சிரிப்பு அடங்க சற்று நேரம் ஆனது

மீரா இன்னும் சற்று சகஜமாக இயலாமல் இருந்தாள். அதை சரி செய்ய எண்ணியோ என்னவோ

"ஒகே... இவ்ளோ நடந்தப்புறம் நமக்குள்ள நீங்க வாங்க எல்லாம் எதுக்கு... " என்று அவன் கூற

"அதுக்கு மொதல்ல உங்க பேரு எங்களுக்கு தெரியணுமே" என்றான் சதீஷ் அப்பாவியாய், மீண்டும் ஒரு சிரிப்பு வெடித்தது அவ்விடம்

"ஒகே... I'm Stevenson, call me steve" என்றவன் மீராவின் முகத்தை காண, ஸ்டீவ் எதிர்பார்த்தது போலவே அவள் முகத்தில் ஒரு ஆச்சர்ய அலை தெரிந்தது

"And... she is my best friend Madhu" என தன் தோழியை அறிமுகம் செய்தான்

"Interesting... by the way... I'm Satish" என கை நீட்டினான் மதுவிடம் விளையாட்டாய்

"ஹலோ மிஸ்டர் சதீஷ்.... உங்க விளையாட்டெல்லாம் இந்த ஊரு அம்மணிககிட்ட வெச்சுகோங்க சார்... இந்த மது ரெம்ப பாத்தாச்சு" என அவளும் கேலி செய்ய சிரிப்பு சத்தம் ஓய சற்று நேரமானது

"அது சரி... என்னமோ நமக்குள்ள இவ்ளோ நடந்தப்புறம்னு பில்ட் அப் பண்ணின, என்ன ஸ்டீவ்?"

"அது வந்து மது..." என சதீஷ் ஏதோ கூற முயல

"நீ சொன்ன வரைக்கும் போதும்... பேசாம இரு" என்றாள் மீரா நிஜமான கோபத்துடன்

"வாவ்... அழகான பொண்ணுக கோபபட்டா கூட அழகு தான்னு இப்போ ஒத்துக்கறேன்" என ஸ்டீவ் கூற மீரா கோபம் மறந்து சிரித்தாள்

"ஆஹா... என்ன ஸ்டீவ் இது? இப்படி பப்ளிக்கா அப்ளிகேசன் போடறது not so cool..."

"Don't worry Madhu... உனக்கு வேணும்னாலும் அப்ளிகேசன் போட  ஆள்  ரெடி  பண்றேன்..." என ஸ்டீவ் கேலி செய்ய

"ஆள விடு சாமி" என அவள் நகர

"ஹேய் ஹேய்... வெயிட்... என்ன நடந்ததுன்னு நீ தெரிஞ்சுக்க வேண்டாமா?" என நடந்தவற்றை ஸ்டீவ் கூற மது சத்தமாய் சிரித்தாள்

"எல்லாம் இந்த கொரங்கால வந்தது" என்றாள் மீரா சதீஷை முறைத்தவாரே

"சதீஷ் சொன்னதுல தப்பெதுவும் இல்ல மீரா... I'm an Italian..he was right" என ஸ்டீவ் கூற

"What?" என அதிர்ந்தனர் மீரா சதீஷ் இருவரும்

"ஏன்...? உங்க தமிழ் சினிமால எல்லாம் வர்ற மாதிரி இட்டாலியன் கூட பிரெண்ட் ஆகரதில்லைன்னு எதாச்சும் ப்ராமிஸ் இருக்கா?" என ஸ்டீவ் கேலி போல் கேட்க

"அதில்ல... பட்... நீங்க... தமிழ் எப்படி..இவ்ளோ fluentஆ ..."

"அதை நான் சொல்றேன் மீரா... ஸ்டீவ் என்ற ஸ்டீவென்சன் அவதரித்தது Italyல தான். ஸ்டீவோட அப்பா ஒரு Father .. "

"மது, எங்க அப்பா கூட பாதர் தான் மதர் இல்ல" என சதீஷ் டைமிங் காமெடி உதிர்க்க, மீரா அவனை முறைப்பதை பொருட்படுத்தாமல்

"ஹா ஹா ஹா... I like you man" என ஸ்டீவ் சதீஷ் தோளில் நட்பாய் கை போட

"ஐயோ... நான் அப்படிபட்டவன் இல்ல ஸ்டீவ்" என சதீஷ் விலகி நிற்க, அதற்கு மேல் அடக்கமாட்டாமல் மூவரும் சிரித்தனர்

"எங்க மீரா புடிச்ச இப்படி ஒரு பிரெண்ட்?"

"இது நான் தேடி புடிச்சதில்ல மது... தானா வந்து ஒட்டிகிட்டது"

"என்ன என்னை அது இதுங்கற... நான் என்ன ஆடா மாடா" என சதீஷ் குரல் உயர்த்தினான்

"ரெண்டும் தான்... உன் ஹிஸ்டரி மொத்தமும் எனக்கு தெரியும் ஞாபகம் வெச்சுக்கோ" என இயல்பாய் மீரா அவனிடம் எப்போதும் போல் வம்பாய் பேச, தன்னையும் அறியாமல் ஸ்டீவின் கண்கள் இருவரையும் அளவெடுப்பது போல் பார்த்ததை யாரும் கவனிக்கவில்லை

"நம்ம ஹிஸ்டரி அப்புறம் பேசலாம்... மொதல்ல இந்த இட்டாலிகாரன் ஹிஸ்டரி என்னனு சொல்லு மது... எனக்கு மண்டையே வெடிச்சுடும் இல்லேனா" என்றான் சதீஷ் பொறுமை இழந்தவனாய்

"நீ எங்க சொல்ல விடற சதீஷ்" என மது கேலி செய்ய

"ஒகே ஒகே... me silent ...சொல்லு சொல்லு" என சதீஷ் நல்ல பிள்ளை போல் அமைதியாய் நின்றான்

"ஸ்டீவுக்கு அஞ்சு வயசு இருக்கறப்ப அவங்க அப்பாவுக்கு Missionary மூலமா சென்னைல ஒரு கேத்தலிக் சர்ச்ல Father போஸ்டிங் கெடைச்சு இந்தியா போக வேண்டி வந்தது. அப்புறம் பத்து வருஷம் சென்னைவாசி தான் இவன். அப்போ தான் ஸ்கூல்ல பிரெண்ட்ஸ் கூட பேசி தமிழ் நல்லா கத்துகிட்டான. ஒரிஜினல் தமிழ் பொண்ணான என்னை விட நல்லாவே சுத்த தமிழ் பேசுவான். நானும் இவனும் இப்ப அஞ்சு வருசமா பிரெண்ட்ஸ் 11th gradeல இருந்து...  எங்க பாமிலியும் அப்போ தான் இங்க Canada immigrate ஆகி வந்தோம்"

"வாவ்... நம்பவே முடியல" என்றாள் மீரா இன்னும் ஆச்சிர்யம் விலகாமல்

"உண்மைய சொல்லணும்னா... எனக்கு தமிழ் லேங்குவேஜ் பிடிச்சு தான் கத்துகிட்டேன். வீட்டுக்கு தெரியாம தமிழ் எழுத க்ளாஸ் எல்லாம் கூட போய் இருக்கேன் சென்னைல இருந்தப்ப. இங்க வந்தப்புறமும் நெறைய தமிழ் புக்ஸ் தேடி தேடி படிப்பேன் just out of interest, ofcourse வீட்டுக்கு தெரியாமதான்"

"ஏன் உங்க வீட்டுல திட்டுவாங்களா?"

"ஆமா மீரா. எங்கப்பா strict Catholic Father. வீட்டுல மிலிட்டரி ரூல் தான். சென்னைல கேத்தலிக் ஸ்கூல்ல தான் சேத்து இருந்தாங்க என்னை. அப்பாவோட siblings (உடன் பிறப்புகள்) எல்லாம் கனடால இருந்ததால எப்படியும் இங்க வந்துடனும்னு முயற்சி பண்ணிட்டு இருந்தாரு. அதனால நான் பிரெஞ்சு கத்துக்கணும்னு ரெம்ப force பண்ணுவாரு"

"நீங்க தமிழ் பேசறது வீட்டுல தெரியுமா?"

"ம்... அம்மாவுக்கு தெரியும் மீரா. அப்பாவுக்கு தெரிஞ்சா நான் காலி" என ஸ்டீவ் சிரிக்க

"இங்க வந்து accustom ஆகறது கஷ்டமா இருக்கலையா உங்களுக்கு?"

"ஹேய்... மீரா... கால் மீ ஸ்டீவ்... வாங்க போங்க எல்லாம் வேண்டாம்"

"அது...சட்டுன்னு வர்ல...." என மீரா தயங்க

"இந்த மரியாதை தான் எனக்கு தமிழ்ல மொதல்ல கவர்ந்த விஷயம். இங்கிலீஷ்ல just you me தான் இருக்கு... "

"அம்மா தாயே... உன் பேட்டி எல்லாம் முடிஞ்சதா... எனக்கு பசி உயிர் போகுது" என சதீஷ் மயக்கம் வரும் போல் பாவனை செய்ய

"செவிக்குணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் சதீஷ்" என ஸ்டீவ் கூற, ஆச்சரியத்தில் சதீஷ் விழிக்க "திருக்குறள் கூட கொஞ்சம் தெரியும், தமிழ் க்ளாஸ்ல கத்துக்கிட்டது" என குறும்பாய் கண்ணடித்து சிரித்தான் ஸ்டீவ்

தன்னையும் அறியாமல் ஒரு கணம் மீராவின் பார்வை அவன் முகத்தில் பதிந்தது, அவன் சிரிப்பை ரசித்தது. அதே நேரம் அவனும் அவளை பார்க்க சட்டென பார்வையை விலக்கினாள் மீரா

இதை கவனிக்காத சதீஷ் "நான் அம்பேல்... மீரா இவன் மட்டும் நம்ம ஊரு டிவிகாரங்க கண்ணுலபட்டான் அவ்ளோ தான்... சாலமன் பாப்பையாவை தூக்கிட்டு இவனை காலைல ப்ரோக்ராம்ல போட்டு காசு பண்ணிடுவாங்க. கொஞ்சம் ஏமாந்தா வெள்ளை வள்ளுவர்னு இவனுக்கு மெரீனா பீச்ல சிலை வெச்சாலும் வெப்பாங்க... எப்படியோ ஒளிஞ்சு போங்க... நான் போய் ரொட்டிய அசை போடறேன்..."

"நீ அதுனு சொன்னது கரெக்ட் தான் மீரா" என நேரம் பார்த்து மது கேலி செய்ய, சதிஷின் முறைப்பை கண்டுகொள்ளாமல் மீரா சிரிக்க, அதை ஒரு ஜோடி கண்கள் ரகசியமாய் ரசித்தது

இனி...

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 1)


Toronto University வளாகம் புது பொலிவு பெற்று இருந்தது

விடுமுறை முடிந்து திரும்பிய மாணவர்கள் இரண்டு மாத கால கதையை பிரதாபித்து கொண்டு இருந்தனர்

அப்போது தான் சேர்ந்திருந்த புது மாணவர்கள் கண்களில் கொஞ்சம் கலக்கமும் நிறைய கனவுமாய் வலம் வந்தனர்

அந்த கூட்டத்துல இந்த கதைக்கு சம்மந்தப்பட்ட ரெண்டு பேர் யூனிவர்சிட்டிகுள்ளேயே இருக்கற ஒரு Food Courtல உக்காந்துட்டு என்னமோ பேசிட்டு இருக்காங்க... என்ன பேசறாங்கன்னு கேப்போம் வாங்க...

"சதீஷ் அங்க பாரேன் ஒருத்தன் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"எங்க மீரா?"

"உனக்கு சைடுல நமக்கு அடுத்த டேபிள்ல...சட்டுன்னு திரும்பாத"

"ம்... " என்றவன் மெதுவாய் இயல்பாய் திரும்புவது போல் திரும்பி பார்த்தான்

"என்ன நான் சொன்னது கரெக்டா சதீஷ்?"

"ம்... கரெக்ட் தான்... அவனை இன்னிக்கி ஓரியன்டேசன்ல பாத்தா மாதிரி ஞாபகம்"

"ஓ...நம்ம க்ளாஸ்ஆ?"

"தெரியல...எல்லா மேஜர்க்கும் ஜெனரல் ஓரியன்டேசன் செசன் தானே இங்கெல்லாம்... மே பி நம்ம க்ளாஸ்ஆ இருக்கலாம். எல்லாரும் Self Introduce பண்ணிகிட்டப்ப இவன் தன்னை இட்டாலியன்னு சொன்னதா ஞாபகம்"

"ஓ... நான் கவனிக்கல"

"ஆமா பாத்தனே நீ தூங்கி தூங்கி விழுந்ததை"

"ஏய்... நான் ஒண்ணும் தூங்கல... ஓரியன்டேசன் பைண்டர் படிச்சுட்டு இருந்தேன்"

"நம்பிட்டேம்மா..." என சதீஷ் சிரிக்க

"உனக்கு ரெம்ப கொழுப்புடா ஆனாலும்... ஏய் அவன் மறுபடியும் நம்மளையே பாக்கறான்"

"நம்மளை இல்ல உன்னைனு சொல்லு... அழகா ஒரு பொண்ணு இருந்தா பாக்கத்தானே செய்வாங்க"

"நெஜமாவா சொல்ற... நான் அவ்ளோ அழகா இருக்கேனா?" என மீரா வெட்கப்படுவது போல் நடித்து அழகாய் கேட்க

"Sorry I lied" என குறும்பாய் சிரித்து கொண்டே சதீஷ் கூற

"ஏய்... யு... யு... " என அவனை அடிக்க புத்தகத்தை எடுத்தாள்

"ஒகே ஒகே... சமாதானம் சமாதானம்" என கையில் இருந்த வெள்ளை பேப்பரை காட்டினான்

"சதீஷ்... அந்த பையன் இன்னும் நம்மளையே பாத்துட்டு இருக்கான்"

"பாத்துட்டு போகட்டும் விடு மீரா"

"நேத்து ஒருத்தி பிசாசு மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வந்தானு நான் ஒரு நிமிஷம் முழிச்சு பாத்ததுக்கு starring is bad manners, did your mom not teach it னு ஒரு மணிநேரம் இங்கிலீஷ் லெக்சர் குடுத்தாளே அதை அப்படியே இப்ப இவனுக்கு குடுக்கட்டுமா?"

"வேண்டாம் மீரா... பாவம் அவனுக்கு இங்கிலீஷ் மறந்துடும், பொழச்சு போகட்டும் விடு" என சதீஷ் சிரிக்காமல் சொல்ல

"உன்ன... இரு இரு... நோட்ஸ் வேணும்னு வந்து நிப்பெல்ல அப்ப சொல்றேன் யாருக்கு இங்கிலீஷ் மறக்கும்னு" கோபமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னாள் மீரா

"ஒகே ஒகே... சும்மா கிண்டல் தானே...சாரி" என பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்ச அவர்கள் பின்னால் இருந்த அவன் லேசாக புன்னகைத்தான்

"ஏய் ஏய்... அவன் சிரிக்கறான்.. என்னமோ நாம பேசறது ரெம்ப புரிஞ்ச மாதிரி"

"அவன் ஏதோ Magazine வெச்சுருக்கான் பாரு... அதுல ஏதோ படிச்சுட்டு சிரிக்கறான் போல இருக்கு"

"ம்...ஆமாம் கரெக்ட்... அவனும் அவன் மூஞ்சியும்"

"ஏன் அவன் மூஞ்சிகென்ன?"

"இல்ல... அடிக்கற கிரீன் கலர் ஷர்ட்... கண்றாவி... நம்ம ஊர்ல கட்டிட வேலைக்கு வர்றவன் மாதிரி இருக்கான்"

"ஹா ஹா ஹ... நல்ல கம்பாரிசன்"

"ம்... அவன் தலைய பாரேன் என்னமோ எலி கரண்டி வெச்ச தேங்கா மாதிரி"

"சான்சே இல்ல மீரா... நல்லா சிரிக்க வெக்கற... பேசாம நீ அசத்த போவது யாரு ப்ரோக்ராம்க்கு போலாம்"

"நக்கல் தான் உனக்கு"

"எஸ் எஸ்"

"அவன் பேரு என்ன சொன்ன?"

"நான் எப்ப சொன்னேன்?"

"காலைல ஓரியன்டேசன்ல என்னமோ சொன்னான்னு சொன்னியே"

"இட்டாலியன்னு சொன்னான்... பேரு சொல்லல"

"ஐ சி... அவனோட ஹேர் அது நேச்சுரல் கலர் இல்லைன்னு தோணுது... கலர் பண்ணி இருக்கான்..."

"இல்ல மீரா... இட்டாலியன்ஸ்க்கு Black Hair தான் நம்மள போல... Blonde இல்ல"

"ஓ... அவன் ஷூவ பாரேன்... என்னமோ பார்முலா ஒன் ரேஸ் கார் கூட ஓட போறவன் மாதிரி வில் எல்லாம் வெச்சு.. கண்றாவி"

"ஹா ஹா... " என சிரித்தான் சதீஷ்

"கைல ஒரு புக் கூட இல்ல... இவனெல்லாம் என்ன படிக்க போறானோ"

"ஏய்... இந்த வாரம் முழுக்க ஜஸ்ட் ஓரியன்டேசன் தானே மீரா... நீ தான் நான் சொல்ல சொல்ல கேக்காம நாலு நாளா என்னையும் சேத்து புக் பாக்னு தூக்க வெச்சுருக்க... பொண்ணுங்க எல்லாம் என்னை லூசா நீ ங்கற மாதிரி பாக்கறாங்க"

"அது என்ன பொண்ணுங்க... பசங்க உன் கண்ணுல படலியா"

"பொண்ணுங்க அளவுக்கு படல"

"சரியான ஜொள்ளு பார்ட்டிடா நீ... ச்சே"

"சரியா சொல்லு... no harm ஜொள்ளு பார்ட்டி"

"எப்படியோ போ... அந்த பையன் வெச்சுருக்கற Magazine பாரு... என்னமோ யோகானு போட்டிருக்கு.. சரியான சாமியார் போல இருக்கு"

"மீரா... திஸ் இஸ் டூ மச்... " என அவனும் அடக்க மாட்டாமல் சிரித்தான்

"அவன் கைல பாரேன் ஒரு லிட்டர் பாட்டில் சைஸ்ல காபி கப்... இந்த ஊரு ஜென்மங்க எப்படி தான் இப்படி காப்பிலையே உயிர் வாழுதுங்களோ... எப்படா MBA முடிச்சுட்டு ஊர் போய் சேருவோம்னு இருக்கு"

"அடிப்பாவி நீ தானே அடம் பிடிச்சு இங்க வரணும்னு என்னையும் சேத்து வம்புல மாட்டி விட்ட"

"அப்படியாச்சும் நீ உருபடட்டும்னு தான்"

"நேரம் தான்... சிவனேன்னு செந்தமிழ் நாட்டு தமிழச்சிகளை சைட் அடிச்சுட்டு சந்தோசமா இருந்தவனை இப்படி பனி காட்டுல கொண்டு வந்து தள்ளிட்டீங்க எல்லாரும் சேந்து"

"ஏய்...ரெம்ப டிராமா பண்ணாத சதீஷ்... இந்த ஒரு வாரத்துல யுநிவர்சிட்டில உன் ரவுசு தாங்காம நெறைய பொண்ணுங்க Torontoவ விட்டு போய்ட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்"

"எல்லாம் நேரம் தான்... பேசு பேசு"

"சரி அதை விடு... சதீஷ் அங்க பாரு அவன் ஐ-போன் வெச்சுட்டு செம அலப்பறை செய்யறான். நம்ம ஊர்ல இதை விட சூப்பர் மாடல் போன் எல்லாம் இருக்குனு இவனுக்கு என்ன தெரியும்... கூமுட்ட"

"என்ன மீரா... ஓவரா லோக்கல் பாஷை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்ட"

"அப்பப்பா பேசறது தான்... அது சரி... நீ அந்த இத்தாலிகாரன் பத்தி என்ன நெனைக்கற"

"என்ன நெனைக்கிறேன்னா... " என ஏதோ சீரியஸ்யாய் சிந்திப்பவன் போல் பாவனை செய்துவிட்டு "அவன் உன்னை பாக்கறதை விட நீ அவனை அதிகம் பாக்கறேன்னு நினைக்கிறேன்" என சிரித்து கொண்டே சதீஷ் குறும்பாய் கூற

"யு...யு... " என கோபத்தில் கையில் இருந்த புத்தகத்தை அவன் மேல் வீசினாள்

சதீஷ் அதை எதிர்பார்த்தவன் போல் சட்டென குனிய அவள் வீசிய புத்தகம் சதீஷ் பின் அமர்ந்திருந்த அந்த இத்தாலிக்காரன் மேல் போய் விழுந்தது

அவன் தன் கையில் வைத்திருந்த காபி கோப்பை சிதறி அவன் மேல் அபிஷேகம் ஆகியது

மீரா சதீஷ் இருவரும் செய்வதறியாது திகைக்க அவன் இவர்கள் இருவரையும் ஒன்றும் பேசாமல் பார்த்தான்

அவன் கண்களில் தெரிவது கோபமா கேலியா என புரியாமல் மீரா தடுமாறினாள்

மீரா தான் முதலில் சுதாரித்து "Sorry... I'm extremely sorry..." என கூற

"அதையும் தமிழ்லயே சொல்லி இருக்கலாமே... எனக்கு புரியாம இருந்திருக்குமல்ல" என அழகு தமிழில் அவன் பேச

இயல்பிலேயே பெரிய கண்களை உடைய மீரா இப்போது அதிர்ச்சியில் இன்னும் கண்கள் விரிய கருவிழிப்பாவை தெறித்து வெளியே விழுந்து விடுமோ என எண்ணும் படி விழித்தாள்

சூழ்நிலை மறந்து அவளது அழகிய மருண்ட விழிகளை கண்ணிமைக்காமல் ரசித்தான் அவன்

இனி...


(ஜில்லுனு தொடரும்...)

காதல்... (சிறுகதை)

"எனிதிங் எல்ஸ் சார்?" என பேரர் கேட்க

"சித்து?" என கேள்வியாய் அவனை பார்த்தார் சதீஷ்

"ரெண்டு ஐஸ்கிரீம் சாப்டாச்சு.... அயம் டன் டாடி" என்றான் சித்தார்த்

"ஒகே, பில் ப்ளீஸ்" என்றார் சதீஷ், பேரரிடம்

பேரர் நகரவும், "சித்து... மம்மி ஆபீஸ்ல இருந்த வர லேட் ஆகும்னு போன் பண்ணினா, நாம அப்படியே கொஞ்ச நேரம் பீச்ல சுத்திட்டு அப்புறம் போய் மம்மிய பிக் அப் பண்ணிக்கலாமா?"

"ஒகே டாடி" என உற்சாகமாய் தலையசைத்தான் சித்தார்த்

காரில் ஏறியதும் ஏதேதோ பேசியபடி நேரம் கழிய அதற்குள் பீச் வந்துவிட்டிருக்க, காரை பார்க் செய்து விட்டு இறங்கி நடந்தனர்

சிறிது நேரம் மணலில் கால் புதைய நடந்தபின் "கொஞ்ச நேரம் உக்காரலாம்" என மணல் திட்டில் அமர்ந்தார் சதீஷ்

அருகே அமர்ந்தவன் "டாடி, இந்த வருஷம் ஜோனல் புட்பால் மேட்ச்சுக்கு வர்றயானு சார் இன்னிக்கி கேட்டாரு... டெய்லி ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சு ஒன் ஹவர் ப்ராக்டிஸ் இருக்கும்... போகட்டுமா டாடி?" என எதிர்ப்பார்ப்புடன் கேட்டான்

"இதெல்லாம் ஹோம் மினிஸ்டர் உன் மம்மியோட டிபார்ட்மென்ட்... பெட்டிசன் போட்டு பாப்போம்" என சிரித்தார் சதீஷ்

"ஒருவேள மம்மி வேண்டாம்னு சொன்னா?" என பாவமாய் கேட்க, செல்லமாய் அவன் தலையை கலைத்தவர்

"நாம ரெண்டு பேரு சேந்து மம்மிய கன்வின்ஸ் பண்ண முடியாதா சித்து? சியர் அப்" என உற்சாகப்படுத்தியவர், "ஆனா, டெர்ம் எக்ஸாம்ல மார்க் கம்மியாகாதுனு நீ ப்ராமிஸ் பண்ணனும்" என்றார் பொறுப்புள்ள தந்தையாய்

"ச்சே ச்சே... அதெல்லாம் ஆகாது டாடி" என்றான் தந்தையின் ஆதரவு கிடைத்த மகிழ்ச்சியில்

அதன் பின் சற்று நேரம் மௌனமாய் இருந்தான். ஏதோ பேச நினைத்து தயங்கி கொண்டிருக்கிறான் என புரிந்தும், அவனே ஆரம்பிக்கட்டும் என நினைத்தவர், தானும் ஏதோ யோசனையில் இருப்பது போல் பாவனை செய்தபடி கடலை பார்த்து கொண்டிருந்தார் சதீஷ்

சில நாட்களாகவே அவன் ஏதோ யோசனையில் இருப்பது போலவே இருக்கிறான் என முன் தினம் இரவு மனைவி கூறியதும், தானும் அதை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன் என்றவர், அவனை மனம் விட்டு பேச வைக்கவே பள்ளியில் இருந்து நேரே வெளியே அழைத்து வந்தார்

அவர் எதிர்பார்த்தது போலவே சித்தார்த் பேச்சை ஆரம்பித்தான்

"டாடி..." என தயக்கமாய் நிறுத்த

"என்ன சித்து?" என இயல்பாய் கேட்பது போல் கேட்டார்

"அது..."

"சித்து கண்ணா, நான் உனக்கு டாடி மட்டுமில்ல, பெஸ்ட் பிரெண்ட்'னு உனக்கே தெரியும். என்கிட்ட பேசறதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்கற?" என சிநேகமாய் புன்னகைக்க

"அது வந்து டாடி... உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்... திட்ட மாட்டீங்க தானே" என்றான் இன்னும் தயக்கமாய்

"நோ ப்ராப்ளம், சொல்லு" என்றார்

"டாடி, நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்" எனவும், சதீஷ் மயங்கி விழுந்து விடாமல் இருக்க தன்னை நிதானப்படுத்தி கொண்டார்

பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதேனும் மோதலாய் இருக்கும், சமாதானம் செய்தால் சரியாகி விடுவான் என்ற யோசனையுடன் தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தவர், இப்போது என்ன செய்வதென புரியாமல் விழித்தார்

மகனை இன்னும் சிறு குழந்தையாய் தான் பார்த்தாலும், பதின்ம வயதின் தொடக்கத்தில் இருக்கிறான் என்பது அப்போது தான் மனதில் உறைத்தது. பதிமூன்று வயதில் காதலா என மனதில் கோபம் எழுந்த போதும், இதை சரியாய் கையாள வேண்டுமென உள்மனம் கூற

"ம்... யாரு அந்த பொண்ணு?" என முடிந்தவரை தன்னை இயல்பாக்கிகொண்டு புன்னகையுடன் கேட்டார்

"அது... என் க்ளாஸ்ல ஸ்வேதானு..." என ஒரு கணம் நிறுத்தியவன், பின் உற்சாகமாய் "வெரி ஸ்வீட் கேர்ள் டாடி. நான் லாஸ்ட் மன்த் பீவர்னு லீவ் எடுத்தப்ப அவ தான் எனக்கு க்ளாஸ் நோட்ஸ் எல்லாம் குடுத்து ஹெல்ப் பண்ணினா" என்றான், ஏதோ உலகத்தையே வென்று விட்ட மகிழ்ச்சியில்

"க்ளாஸ் நோட்ஸ் குடுத்தா லவ்வா...ஹ்ம்ம்" என மனதிற்குள் பெருமூச்சுவிட்டவர், "அப்படியா? வெரி நைஸ். அது சரி, அந்த பொண்ணும் உன்னை லவ் பண்றாளா?" என சக தோழனிடம் கேட்பது போல் கேட்டார்

"ம்...அது தெரில டாடி... அது எப்படி டாடி கண்டுபுடிக்கறது?" என்றான் குழப்பமாய்

"அடப்பாவி... பெத்தவன்கிட்ட கேக்கற கேள்வியாடா இது? பெரிய பெரிய மேதைகளே பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்க முடியாம நொந்து போய் இருக்காங்க, பதிமூணு வயசுல இந்த ஆராய்ச்சி உனக்கு தேவையா?" என மனதில் தோன்றிய போதும்

"க்கும்... அது வந்து சித்து கண்ணா..." என பேச்சை முடிப்பதற்குள்

"அவளும் என்னை லவ் பண்றான்னு தான் தோணுது டாடி" என்றான் சித்தார்த் உறுதியாய்

"ஓ... சரி, இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கே" என்றார் அவன் மனதை அறிந்து கொள்ளும் முயற்சியில்

"ம்... அது... நாளைக்கு வேலண்டைன்ஸ் டே, அவகிட்ட ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன் டாடி"

"ஐயோ" என மனதில் எழுந்த ஓலத்தை அடக்கியவர் "ஓ, சரி... அப்புறம்?" என்றார் கேள்வியாய்

"அப்புறம்... அ....என்ன டாடி கேக்கரீங்க?" என்றான் கேள்வி புரியாமல்

"இல்லடா கண்ணா, இப்ப நீ ப்ரபோஸ் பண்றா, அவ ஒகே சொல்றா, லவ் பண்றீங்க, அப்புறம்?" என கூர்மையாய் மகனை பார்த்தபடி கேட்க

"அ... அப்புறம்..." என விழித்தான்

"இப்பவே கல்யாணம் பண்ணிக்க முடியுமா?"

"அதெப்படி டாடி... படிச்சு முடிச்சு... வேலைக்கு போயி அப்புறம் தானே...கரெக்ட் தானே டாடி?" என்றான் குழப்பமாய்

"ரெம்ப கரெக்ட். அதுக்கு இன்னும் எப்படியும் பத்து பன்னண்டு வருசமாச்சும் ஆகும், கரெக்டா?" என கேட்க, ஆமோதிப்பது போல் தலையசைத்தான்

தோழமையுடன் மகன் தோளில் கை போட்டவர் "சித்து, நான் சொல்றதை நீ கொஞ்சம் பொறுமையா கேப்பியா இப்போ?" என தந்தை கேட்க, மௌனமாய் தலையசைத்தான் சித்தார்த்

"லவ் பண்றது தப்புனு நான் சொல்லல. ஆனா இப்ப அதுக்கான டைம் இல்ல...."

"ஆனா டாடி..." என இடைமறிக்க

"நான் பேசி முடிச்சுடறேன் ப்ளீஸ்" எனவும்

"ஒகே டாடி" என்றவனின் முகம் குற்றஉணர்வுடன் தாழ்ந்தது

அது பெற்றவரின் மனதை வருத்த "சித்து, மொதல்ல நீ ஒண்ணு புரிஞ்சுக்கணும், நீ எந்த தப்பும் செய்யல. இந்த வயசுல இது இயல்பு தான். ஆனா புத்திசாலித்தனமா இந்த கட்டத்தை கடந்து வர்றவங்க லைப்ல சக்சஸ் ஆகறாங்க. தப்பான கைடன்ஸ்னால யோசிக்காம முடிவு எடுக்கறவங்க பின்னாடி பீல் பண்றாங்க, புரியுதா?" என நிறுத்தினார்

"ம்..." என்றவனின் குரலில் இருந்து தான் சொன்னதை அவன் முழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது புரிய, தொடர்ந்தார் சதீஷ்

"இப்ப நான் ஒண்ணு கேக்கறேன் உண்மையா பதில் சொல்லு. உன் மனசுல இந்த மாதிரி தோண ஆரம்பிச்சபுறம் உனக்கு க்ளாஸ்ல கான்சென்ட்ரேசன் குறைஞ்சுருக்குனு நீ ஒத்துக்கறையா?"

"அது..." என சித்தார்த் மெளனமாக

"பீ ஹானஸ்ட் கண்ணா, டாடிகிட்ட தானே சொல்ற" எனவும்

"எஸ் டாடி... அயம் டிஸ்டர்ப்'ட்" என்றான்

"தட்ஸ் குட். இந்த அளவுக்கு நீ ரியலைஸ் பண்றதே கிரேட்" என அவன் தோளில் தட்டியவர் "அப்படி படிப்பு பாதிச்சா உன்னோட எதிர்காலமே வீணாயிடுமில்லையா சித்து. நீ அப்படி சக்சஸ் ஆகாம போய்ட்டா, இப்ப ஒகே சொல்ற ஸ்வேதாவுக்கு கூட அப்புறம் உன்னை பிடிக்காம போய்டலாம். அது ரெம்ப ரிஸ்க் இல்லையா?" என அவன் வீக் பாய்ண்டை பிடிக்க, அதிர்ச்சியாய் பார்த்தான்

"சோ, அதுக்கு தான் சொல்றேன். இப்ப படிப்புல மட்டும் கவனம் செலுத்து. லைப்ல உனக்குனு ஒரு லட்சியம் வேணும் சித்து, டாக்டர் ஆகணும் லாயர் ஆகணும்னு நான் சொல்லல்ல. அது மட்டும் தான் ப்ரோபசனும் இல்ல. இப்ப நீ புட்பால் நல்லா விளையாடறேனு தானே உங்க சார் ஜோனல் மேட்சுக்கு கூப்ட்டார், அதுவே கூட உன்னோட எதிர்காலமா இருக்கலாம். இல்ல இன்னும் பெரிய க்ளாஸ் போகும் போது உன்னோட இண்டரெஸ்ட் வேற எதுலயாச்சும் போகலாம், அதுல நீ உனக்குனு ஒரு இடத்த புடிக்கணும். அதான் இப்ப உன்னோட மனசுல இருக்கணும். டூ யு அக்ரீ சித்தார்த்?" என கேள்வியாய் நிறுத்த

ஒரு கணம் யோசனையுடன் பார்த்தவன், பின் "எஸ் டாடி" என்றவனின் முகத்தில் தெளிவு பிறந்திருந்தது

"யு நெவர் நோ சித்து... பின்னாடி நீ பெரிய ஆளா ஆனப்புறம் இந்த ஸ்வேதாவே உன்னை தேடி வரலாம்" என சிரிப்புடன் கூற சித்தார்த்தின் புன்னகை விரிந்தது

"இப்ப தான் சிரிப்பு வருதா?" என சதீஷ் கேலி செய்ய, உடன் சேர்ந்து சிரித்தவன், பின் சலுகையாய் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு "தேங்க்ஸ் டாடி" என்றான்

"டாடிக்கே தேங்க்ஸ்'ஆ?" என சிரித்தவர் செல்போன் ஒலி கேட்க "உஷ்.. ஹோம் மினிஸ்டர் காலிங்" என பயந்த பாவனை காட்டி செல்போனை உயர்பித்து "சொல்லு சரண்" என்றார்

"எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்? என்னை பிக் அப் பண்ற ஐடியா இருக்கா இல்லையா?" என்றாள் சரண்யா

"ம்... கண்டிப்பா பிக் அப் பண்ணனுமா... இரு சித்துகிட்ட கேக்கறேன்... சித்து, கண்டிப்பா மம்மிய பிக் அப் பண்ணனுமா?" என கண்ணடித்து சிரிக்க

"யோசிச்சு சொல்றேன் டாடி...மறுபடி கால் பண்ண சொல்லுங்க" என்றான் சித்தார்த் சிரிப்பை அடக்கியபடி

"உங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கி டின்னர் செய்யணுமா வேண்டாமான்னு நானும் யோசிச்சு சொல்றேன்" என சரண்யா வம்பாய் கூற

"ஐயையோ... என்ன சரண் இப்படி எல்லாம் ப்ளேக்மெயில் பண்ற.. இதோ வந்துட்டோம்.. பை" என எழுந்தபடி செல்போனை அணைத்தார்

***************************

அன்றிரவு தனிமையில் மனைவியிடம் "சரண் உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா? சித்து ஒரு பொண்ணை லவ் பண்றனாம்" எனவும் "என்னது?" என அதிர்ச்சியாய் எழுந்து அமர்ந்தாள் சரண்யா

பின் நடந்ததை முழுதும் கூற, பெருமூச்சுடன் கணவனின் தோளில் சாய்ந்தாள். ஆனாலும் இன்னும் முழுதும் அதிலிருந்து மீள இயலாமல் யோசனையுடன் இருந்தாள்

"அவன் லவ் பண்றேன்னு சொன்னதும் என் மூஞ்சிய நீ பாத்திருக்கணுமே... நம்ம கல்யாணதன்னைக்கி கூட நான் அவ்ளோ அதிர்ச்சியானதில்ல யு நோ" என கேலியாய் மனைவியை இயல்பாக்க முயன்றார் சதீஷ்

அவரின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் "உங்கள...." என பொய் கோபத்துடன் அடிக்க ஆரம்பித்தாள்

"ஏய் ஏய்... சரி நோ டென்சன்... கொடுமைய பாரேன் சரண், நாமெல்லாம் காலேஜ் வந்தப்புறம் கூட லவ் அது இதுனு யோசிக்க பயப்படுவோம், அப்படியே இருந்தாலும் அப்பா அம்மாகிட்ட மூச்சு விடுவமா... இவன் எவ்ளோ கூலா சொன்னான் தெரியுமா? நான் அப்படியே ஆடி போயிட்டேன்" என்றார் சதீஷ்

"கரெக்ட் தாங்க, ரெம்பவும் மாறித்தான் போச்சு, ஆனா இது ஒரு வகைல நல்லதோனு தோணுது, வேற பிரெண்ட்ஸ் யார்கிட்டயாச்சும் இதை பத்தி அவன் பேசி இருந்தா கண்டிப்பா தப்பா தான் கைட் பண்ணி இருப்பாங்க. உங்ககிட்ட சொன்னதால நல்லதா போச்சு இல்லையா?" என்றாள்

"ம்...கொழந்தைகள அடிச்சு மெரட்டி நல்வழிபடுத்தறத விட இந்த பிரெண்ட்லி அப்ரோச் நல்லதுனு தோணுது. அம்மா அப்பாகிட்டே என்ன வேணா பேசலாம்னு சுதந்திரம் இருந்தா அவங்க ஏன் வேற யார்கிட்டயோ போக போறாங்க. நெறைய பேரண்ட்ஸ் இதை புரிஞ்சுக்காம தப்பு செய்யறாங்களோனு தோணுது"

"ஆமாங்க, அதுவும் இந்த ஜெனெரேசன்'க்கு சொசைட்டி, மீடியா, பிரெண்ட்ஸ்'னு நெறைய எக்ஸ்போஷர் இருக்கு, அவங்க இன்ப்ளூயன்ஸும் இருக்கு. சோ, நம்ம பெத்தவங்க நம்மள வளத்தினத விட நமக்கு நம்ம கொழந்தைங்கள வளக்கறது இன்னும் சவாலாத்தான் இருக்கு. பட் அயம் ரியலி ப்ரௌட் ஆப் யு, எவ்ளோ அழகா இந்த விசயத்த ஹேண்டில் பண்ணி இருக்கீங்க, நான் கூட டென்சன் ஆகி இருப்பேன்னு நெனக்கிறேன்" என்றாள் மனதில் தோன்றியதை மறைக்காமல்

"ஹும்... இப்பவாச்சும் என் அருமை பெருமையெல்லாம் புரிஞ்சா சரிதான்" என சதீஷ் கண்சிமிட்டி சிரிக்க

"ரெம்பத்தான்..." என பழித்தாலும், பெருமிதத்துடன் கணவனை பார்த்தபடி தானும் சேர்ந்து சிரித்தாள் சரண்யா

(முற்றும்)

4 Smart Phones from CES 2012


1: The Nokia Lumia 710

I'll admit, I was a wee bit skeptical that Windows Phone devices could compete with the iPhoneor Android. But after playing around a bit with the new Nokia Lumia 710, I can definitely see it happening.


One of the nice things about Microsoft's latest edition of the Windows Phone operating system is that it didn't simply copy the tried-and-true iPhone formula of having a home screen filled with several small icons of your favorite applications. Instead it has implemented a tile system where you can have a theoretical limitless number of apps on your home screen that you can access through scrolling down. In other words, you won't have to flip through different screens to get your apps since they'll all be available on the same screen. And in case you forget where you placed your apps, you can also do a right-to-left swipe to bring up all your apps in alphabetical order.
Another nifty Windows Phone feature is the "People Hub" application that lets you keep tabs on your friends through LinkedIn, Twitter, Facebook, Windows Live and other big-name social networking services. This hub lets you chat with people wherever they happen to be at a given moment, so instead of simply shooting someone a text message and hoping they're near their phone, the People Hub informs you if they're on Facebook chat or other instant messaging services so you can contact them directly.
The key for the Lumia and other Windows Phone devices will be how well they integrate with Windows 8, which will also feature a start page that utilizes Windows Phone's app tile format. Microsoft will also encourage app development for both Windows PCs and tablets through its Windows Store feature that will give developers an outlet to sell their apps along the lines ofApple's App Store and Google's Android Market. The bottom line: If Microsoft can make its mobile devices an integral part of the Windows experience instead of just a sideshow, it could be in good position to be a solid competitor with iPhone and Android.


2: The Samsung Galaxy Note
The Galaxy Note can be classified as either a large smartphone or a small tablet with voice capabilities. Either way, it's a pretty nice little innovation from Samsung that will further blur the distinction between the two dominant mobile device types.
So, some basics about the Note: It will be coming out on AT&T in the near future, it currently runs on Android 2.3 ("Gingerbread") but will get an upgrade to Android 4.0 ("Ice Cream Sandwich") in the coming months, it's got a 1.4GHz dual-core processor and a 5.3-inch HD Super AMOLED screen.
But what makes it cool is the way Samsung has included an electronic "S Pen" to make the Note the first tablet you can really write on. So let's say you're a teacher whose student sent you his English paper through email. Instead of printing the paper out and using your red marker to point out all the times he misspelled "Shakespeare," you can point out his errors right on your tablet screen and then send it back to him. The pen is also pressure-sensitive and has 256 levels of pressure that let you do some pretty detailed sketches and doodles on your Galaxy Note.

3: The Sony Xperia S 

                          

           As much as we all love Angry Birds and Fruit Ninja, we do occasionally long for mobile games that are slightly more on the complex side. Enter the Sony Xperia S, which was developed specifically with mobile gaming in mind.

I looked at the Xperia S for about two seconds before feverishly clicking on the Xperia's mobile version of "Grand Theft Auto III" and starting to run over virtual civilians with gleeful abandon, all from the comfort of a 4.3-inch HD screen with a resolution of 1280x720 pixels. And unlike past editions of Sony's gaming smartphones, the Xperia S had no slide-out control pad and instead integrated all controls for its games onto its touch screen.
As you'd expect for a phone focused on gaming, the Xperia S has a top-notch 1.5GHz dual core processor as well as HDMI connectivity. It currently runs on Android 2.3 ("Gingerbread") and will get an upgrade to Android 4.0 in the near future.

4: The Motorola Droid 4

Remember the original Motorola Droid? Yeah, that was a pretty cool device way back in the long-forgotten days of late 2009.
It was also the very first Android-based device to run on the Verizon network and was the first true hit for Google's open-source operating system. It's less than three years later and we're already being treated to the fourth edition of the Droid, which features all of the top-notch specs that you'd expect from a modern smartphone: a 1.2GHz dual-processor, 4G LTE connectivity and an 8MP, 1080p HD still/video camera. And like just about every Android smartphone I've seen at CES this year, it runs on Android 2.3 ("Gingerbread") with promises of a forthcoming upgrade to Android 4.0. The Droid 4 also works with Motorola's underappreciated webtop application that lets users dock their smartphones into their laptop docks and type text messages and emails sent through the phone on their home keyboard.
Another good thing about the Droid 4: Unlike the original, this edition features a very solid physical keyboard with distinctly embossed keys that makes typing on your smartphone a breeze. In all the Droid 4 is a fine addition to the brand and shouldn't disappoint fans of earlier models.
Thanks: NetworkWorld.com